×

அரக்கோணத்தில் இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூர கொலை : டிடிவி தினகரன் கடும் கண்டனம்!!

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரக்கோணத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்,சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப் பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்திட வேண்டியது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Aragon ,DTV , டிடிவி தினகரன்
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு