×

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் கம்பெனி ஊழியர் அடித்து கொலை: ஒருவர் கைது

புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் பாரதியார் தெரு சந்திப்பில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்ேபரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சார்ந்த அன்பழகன் (52) என்பதும், இவர், கிண்டியில் உள்ள கார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அன்பழகனை அடித்து கொன்றுவிட்டு தப்பியது பதிவாகி இருந்தது.

தொடர் விசாரணையில், அன்பழகன் நேற்று முன்தினம் மாலை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தியதும், அப்போது, அவருக்கும், 2 வாலிபர்களுக்கும் முட்டை சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதும், அங்கிருந்து புறப்பட்டு வந்த அன்பழகனை, பின் தொடர்ந்து வந்த 2 பேரும், வழிமறித்து அடித்து கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, லட்சுமிபுரம் அசோகா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tasmac , Murder, arrest
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்