காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், அவரது மகனும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.