சென்னை: கடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் மாஸ்க் அணியாதவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. குடிசை பகுதியில் 79 சதவீதம் பேர் மற்றும் மற்ற பகுதியில் 71 சதவீதம் பேர் முறையாக மாஸ்க் அணிவது இல்லை என்று தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள 9 மால்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 51 சதவீதம் பேர் முறையாக மாஸ்க் அணியவில்லை என்று தெரியவந்துள்ளது. சென்னையில் முறையாக மாஸ்க் அணிபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் முறையாக மாஸ்க் அனிந்தவர்களின் சதவீதம் குறைந்துள்ளது.