×

வெயில் கொளுத்துவதால் திண்டுக்கல்லில் இளநீர் விற்பனை அமோகம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் காரணமாக இளநீர் விற்பனை அமோகமாக உள்ளது. திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி, சென்னமநாயக்கன்பட்டி, அய்யலூர் மற்றும் ஆத்தூர், தென்னம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விற்பனைக்கு இளநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், மக்கள் என அனைவரும் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைகால நோய்களிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர்.

தற்போது இளநீர் ரூபாய் 20 முதல் 30 வரை விற்கப்படுகிறது. அதே சமயம் இளநீர் வரத்து சந்தைக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இனி வரும் நாட்களில் விளைச்சல் குறைந்து இளநீர் வரத்து குறையும் அபாயமும் உள்ளது என வியாபாரிகள் கூறினர். இளநீர் வியாபாரி முருகன் கூறுகையில் ‘இளநீர் வியாபாரம் நன்றாக உள்ளது. பொதுமக்கள் அந்நிய நாட்டு பானத்திற்கு எதிராக விழிப்புணர்வு அடைந்து தற்போது இயற்கை பானமான இளநீரை அதிக அளவில் குடிக்க தொடங்கிவிட்டனர்.

வியாபாரம் நன்றாக இருந்தாலும் இளநீர் வரத்து குறைவாக உள்ளது’ என்றார். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே போல் இளநீர், பழங்கள், பழச்சாறு போன்றவை பருகும் போது உடல் இன்னும் ஆரோக்கியம் அடைக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags : Dindigul , Young water sales in Dindigul due to sunstroke
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...