×

திருமூர்த்திமலை சாம்பல் மேடு பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

உடுமலை: உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை செல்லும் சாலையில் சாம்பல்மேடு என்னும் இடம் உள்ளது. இங்குள்ள எஸ் பெண்டு வளைவையொட்டி, ஓடை செல்கிறது. இதில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் மற்றும் தோட்டத்து தண்ணீர் சேர்ந்து பிரதான கால்வாயில் கலக்கிறது. இச்சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. ஆபத்தான எஸ்.பெண்டு வளைவில் தடுப்புச்சுவர் இல்லாததால், அடிக்கடி விபத்து நடக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் திரும்ப முடியாத நிலையில் ஓடைக்குள் விழுந்துவிடுகின்றன.

தொடர் விபத்து காரணமாக அப்பகுதியில் மண் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டினால்தான் விபத்தை முழுமையாக தடுக்க முடியும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். விபத்து நடக்கும்போது அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தடுப்பு சுவர் அல்லது தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumurthymalai , Request to build a retaining wall in the Thirumurthymalai gray ridge area
× RELATED திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில்...