மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் உடல் வெப்பநிலை சோதனைக்கு பிறகே பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி அளிக்கப்படுகிறது. ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு இன்று போக்குவரத்து சுகாதார ஊழியர்கள் பஸ் நிலைய வளாகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கி கூறப்பட்டது.