×

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

டெல்லி: சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சாலைகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மோனிகா லால் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court , Roads should not be blocked: Supreme Court rules ..!
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...