×

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது!: கர்ணன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...திரையரங்கு முன்பு நடனமாடி கொண்டாட்டம்..!!

சென்னை: உலகம் முழுவதும் கர்ணன் திரைப்படம் வெளியான நிலையில் சிறப்பு காட்சியை கொண்டாட்டத்துடன் கண்டுகளித்த படம் சிறப்பாக வந்திருப்பதாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். இயக்குனர் மாறி செல்வராஜ் தனது முதல் படைப்பான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் நாளை முதல் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இன்று உலகம் முழுவதும் கர்ணன் திரைப்படம் வெளியானது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் சிறப்பு காட்சியை காண அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள் பெரும் ஆராவாரங்களுடன் படத்தை கண்டுகளித்தனர்.

திரையரங்கு முன்பு கொண்டாட்டம் களைகட்டியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் மேளம் இசைத்து உற்சாக நடனம் ஆடி கர்ணனை வரவேற்றார்கள். பேனர்களும் கட்அவுட்களும் வைக்கப்பட்டு ரசிகர்கள் தனுஷிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். கர்ணன் திரைப்படத்தை கண்ட உற்சாகத்தில் வந்த ரசிகர்கள், தங்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துவிட்டதாக தெரிவித்தனர். கண்டா வரச்சொல்லுங்க...ஓபனிங் பாடலாக அமைந்தது கூடுதல் சிறப்பு என கூறிய ரசிகர்கள் மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ள தனுஷிற்கு இந்த திரைப்படம் மற்றொரு விருதை பெற்றுத் தரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுடன் இணைந்து, ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Karnan movie, fans, theater, celebration
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...