×

வாடகையை உயர்த்தியதால் கோபம் கடைக்காரரை கத்தியால் குத்தியவர் கைது

சாம்ராஜ்நகர்: கடையின் உரிமையாளரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா டவுன் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரகுப்தா. இவர் இதே பகுதியில் நான்கு கடைகளை கட்டி அவைகளை வாடகைக்கு விட்டு வந்தார். இவரது கடையில் தேவாங்கபேட்டை வீரண்ணா தெருவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் வாடகை இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடைக்கு சென்ற உரிமையாளர் நாகேந்திரகுப்தா கடையின் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மஞ்சுநாத்திடம் தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த இவர் உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

 இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற மஞ்சுநாத்தை தேடி வந்தனர். சம்பவத்தன்று காலை மனைவி பிந்து வீட்டில் மஞ்சுநாத் பதுங்கிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

Tags : Man arrested for stabbing angry shopkeeper for raising rent
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்