×

இன்ஸ்டாகிராம் வழியாக மாணவிக்கு பாலியல் தொல்லை12ம் வகுப்பு மாணவன் கைது

புதுடெல்லி; டெல்லி ஷாதரா துணை போலீஸ் கமிஷனர் ஆர். சத்யசுந்தரத்திடம் விமான பணிப்பெண் பயிற்சி மாணவி ஒரு புகாா அளித்தார். அந்த புகாரில்,’ எனது இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருகிறான். கடந்த 3நாட்களாக அவனது தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை அவன் பாலியல் உறவுக்கு அழைக்கிறான். மேலும் ஆபாசமாக பேசுவதுடன், மிரட்டி தொந்தரவு செய்கிறான். ஆபாசமான, அருவெறுப்பான தகவல்களை அனுப்பி வைக்கிறான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது அனைத்து தகவல்களும் உண்மை என்பது தெரியவந்தது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமாண பணிப்பெண் பயிற்சி மாணவியை அவன் சரமாரியாக மிரட்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜெகத்புரி போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354டி(பின்தொடர்தல்), 506(மிரட்டுதல்), 509(வார்த்தை, செய்கை அல்லது நடத்தை மூலம் பெண்களுக்கு அவமரியாதை செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவன் பின்தொடர்ந்த இ மெயில் ஐடியை பார்த்த போது அது போலி என்பது தெரிய வந்தது. இருப்பினும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடித்தனர். அவன் டெல்லி கிருஷ்ணாநகரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த போனை பறிமுதல் செய்தனர். அதன் மூலம் தான் இமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தளம் மூலம் மாணவியை ஆசைக்கு இணங்குமாறு அவன் மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.



Tags : 12th grade student arrested for sexually harassing student via Instagram
× RELATED விமான நிலைய கழிவறை குப்பை...