×

கேரளா கழிவு கொட்டிய 3 லாரிகள் சிறைபிடிப்பு

ஆனைமலை: தமிழக-கேரளா எல்லைப் பகுதியான கோவை மாவட்டம் பொள்ளாச்சி பொள்ளாச்சி அருகே செமனாம்பதி இரட்டை மடை பகுதியில் கேரளாவை சேர்ந்த ஆண்டனி ஜோஸ் என்பவரது தோட்டத்தில் பாலக்காட்டிலிருந்து நேற்று அதிகாலை 3 டிப்பர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டினர். தகவலறிந்து அங்கு சென்ற விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வந்து லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை ஆய்வு செய்தனர். கழிவு கொண்டு வந்த லாரியில் கேரள மாநில அரசு பணிக்காக இயக்கும் வாகனம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதிகாரிகள் தோட்ட உரிமையாளர் ஆண்டனி ஜோசை தேடி வருகின்றனர்.

Tags : Kerala , Capturing 3 trucks dumping Kerala waste
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...