மும்பை: பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மராட்டியத்துக்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்கவில்லை என அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திற்கு 40 லட்சம், குஜராத்துக்கு 30லட்சம் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு அனுப்பியுள்ளதாக மராட்டிய அமைச்சர் ராஜேஷ் தகவல் கூறியுள்ளார்.