சென்னை: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காலம் முடிந்த பின்னரும் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.