×

‘108’ ஊழியர்களின் கருணை உள்ளம்

பேரையூர்: பேரையூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு மாதமாக உடல்நிலை பாதித்து ஆதரவின்றி கிடந்தவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பேரையூர் பேருந்துநிலையத்தில் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக ஒரு நபர் கிடந்தார். இது சம்மந்தமாக பேரையூர் காவல்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனாலும் இவருக்கு எந்த உதவியும் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் துரைப்பாண்டி, வீரபாண்டி ஆகியோர் நேற்று அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விசாரணையில், மதுரை செல்லூர் அஹிம்சாபுரம் 7வது தெருவைச்சேர்ந்த சக்திவேல் ஆசாரி மகன் சக்திகணேஷ்(42) என்பது தெரியவந்தது. அங்கு இவரது உறவினர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பேருந்து நிலையத்தில் யார் துணையும் இல்லாமல் கிடந்தவரை தூக்கிசென்று சிகிச்சையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்களும், பயணிகளும் பாராட்டினர்.

Tags : 108 , ‘108’ is at the mercy of the staff
× RELATED வெயிலின் தாக்கம்: சேலத்தில் ஆட்சியர்...