×

முன்விரோதம் காரணமா?: சென்னையில் தந்தை கண் முன்னே மகன் கொடூரமாக வெட்டிக்கொலை..7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!!

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரம்மதேவன் என்பவரின் மகன் நாராயணனே வெட்டி கொலைசெய்யப்பட்டவர் ஆவார். 23 வயதான நாராயணன், பாலிடெக்னீக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து, தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாட அண்மையில் சென்னை வந்த நாராயணன் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு சாலை ஓரமாக நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் தந்தை கண் முன்னே நாராயணனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், நாராயணனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நாராயணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி தனன் ஜெயன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. தனன் ஜெயன் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பலே நாராயணனை கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை கண் எதிரே மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Animosity, Chennai, son, murder
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...