×

பூம்புகார் அருகே வாக்களித்தவர்களை விட கூடுதலாக வாக்கு பதிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட திருவாவடுதுறை அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள 175வது வாக்குசாவடியில் 827 வாக்குகளில், 578 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கணக்கிட்டு பார்க்கும்போது 628 வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இதில் பதிவான மொத்த வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக இருந்ததால் நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை அழிக்காததால், இவ்வாறு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், இந்த வாக்குசாவடி மையத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Poompuhar , More voters than Poompuhar registered to vote
× RELATED பூம்புகாரில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை