×

பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது

பெங்களூரு: பெங்களூரு விஜயநகர்அருகே தம்பதிகள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர் பெண் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து விஜயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் நெலமங்கலா டவுன் ஜெயநகர் பகுதியை சேர்ந்த மொகமத்சோபியான் (20) என்று தெரிய வந்தது. இவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 இதில் பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் பறித்து வருவதாக தெரிவித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ₹75 ஆயிரம் மதிப்பிலான 5 செல்போன்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Girl, cell phone, arrested
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...