பெங்களூரு: கன்னட திரையுலகில் மூத்த நடிகையாக இருந்த பிரதிமாதேவி ெபங்களூருவில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பட வர்த்தக சபை உள்பட கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பிறந்த பிரதிமாதேவி, தனது 14 வயதில் நாடகங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 1947ம் ஆண்டு திரைக்கு வந்த கிருஷ்ணலீலா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கால் பதித்தார். அவர் நடித்த ஜகன்மோகினி திரைப்படம் பெரியளவில் பாராட்டை பெற்று கொடுத்தது. நாககன்னி உள்பட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள மகன் விஜயலட்சுமிசிங் வீட்டில் தங்கியிருந்த பிரதிமாதேவிசிங் (88) சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் படுத்திருந்தபோது தூக்கத்தில் அவர் உயிர் பிரிந்தது. பெங்களூருவில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டபின், ஆம்புலன்ஸ் மூலம் மைசூரு சரஸ்வதிபுரத்தில் உள்ள அவரது பண்ைண தோட்டத்திற்கு நேற்று காலை எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டபின் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு கன்னட திரைப்பட வர்த்தக சபை, கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.