சென்னை: 7 செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகா ஆஜராகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.