×

முதல்முறையாக ஓட்டு போட்டது மகிழ்ச்சி-கல்லூரி மாணவிகள் பேட்டி

தர்மபுரி : தர்மபுரி சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது என கல்லூரி மாணவிகள் கூறினர்.தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த திருப்பத்தூர்சாலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கூறுகையில், வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெற்றி பெறும் வேட்பாளர்கள் வாக்காளர்களின், ஜனநாயக கடமையை மதித்து சேவைபுரிய வேண்டும். மக்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு திட்டங்கள் தீட்டி சேவையாற்ற வேண்டும். ஓட்டுபோடுவது அனைவருடைய கடமை. இதை தவற விடக்கூடாது. நிலத்தடிநீர் பிரச்சனை, விவசாய பிரச்சனையை தீர்க்க முன்னுரிமை அளிக்கும் நபர்கள் மக்கள் பிரதிநிதியாக வரவேண்டும்.இவ்வாறு கூறினர்.

Tags : Dharmapuri: College students said they are happy to have voted for the first time in the Dharmapuri assembly election.
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...