×

காரில் கட்சி கொடி, தோளில் அதிமுக துண்டுடன் வாக்குசாவடிக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு!!!

கோவை : கோவையில் கட்சி கொடியுடன் காரில் வாக்குசாவடிக்கு சென்ற அமைச்சர் வேலுமணி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட 100 மீட்டர் தொலைவில் கட்சியினர் கட்சி கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது.

அவ்வாறு செயல்பட்டால் அது தேர்தல் விதிமுறை மீறலாக கருதப்படும். நேற்று வாக்குபதிவு நாளன்று தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குனியமுத்தூரில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.

அப்போது அவரது காரில் கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. கழுத்தில் கட்சி துண்டு அணிந்திருந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர் ராஜாமுகமத், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தேர்தல் விதிமுறை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags : Minister ,S.S. ,Valencia , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...