×

கொளத்தூர் தொகுதியில் பூத்தில் இட நெருக்கடி: வாக்காளர்கள் அவதி

சென்னை:  கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 424 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஓட்டுப்போட சென்றோருக்கு கையுறை வழங்கப்பட்டு சமுக விலகல் கடைபிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும்,  கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள தனியார் பள்ளியில் சமுக விலகலை கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கமாக இருந்தது. இந்த ஒரே பள்ளியில் 10 வாக்குச்சாவடி மையங்களை அதிகாரிகள் அமைத்துள்ளனர். இதனால் நெருக்கடியில் வாக்காளர்கள் ஓட்டு செலுத்திச் சென்றனர்.



Tags : Kolathur , Booth space crisis in Kolathur constituency: Voters suffer
× RELATED நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு...