×

ஜனநாயக கடமையை முடித்துவிட்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு

சென்னை: தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் யோகிபாபு பெரும்புதூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பின்னர், தனது நண்பர்களுடன், கிரிக்கெட் விளையாடினார்.தமிழ் திரையுலகில் பரபரப்பாக இருப்பவர் காமெடி நடிகர் யோகிபாபு. ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் சர்கார், கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, காக்டெய்ல், மண்டேலா உள்பட பல்வேறு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் திருமணமான யோகிபாபு பல படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சிவன்கோயில் அருகில் தனது குடும்பத்துடன் இளம்வயதில் வசித்து வந்தார். தற்போது, சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் யோகிபாபு, தனது வாக்குப்பதிவை, சொந்த ஊரான பெரும்புதூர் பகுதியில் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க, படபிடிப்பில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் யோகிபாபு தனது ஜனநாயக கடமையை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர், தனது பழைய நண்பர்களுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். தற்போது, யோகிபாபு தெருவில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.



Tags : Yogibabu ,
× RELATED பெண் கேரக்டரில் யோகிபாபு