×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முழு கவச உடையுடன் வாக்களித்தார்

சென்னை: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் போட்டியிடுகிறார். இவர், கடந்த 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் அருகே வானகரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன்பிறகு அவருக்காக கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  
இந்நிலையில் ஜோசப் சாமுவேல், நேற்று மாலை 6 மணியளவில் ஆம்புலன்ஸ் அம்பத்தூர் ஆசிரியர் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவர் முழு கவச உடை அணிந்து வாக்குச்சாவடிக்குள் வந்து வாக்களித்து விட்டு கையை உயர்த்திக் காட்டினார். அப்போது அவருடன் முழு கவசஉடை அணிந்தபடி மருத்துவமனை ஊழியர்களும் உடன் உதவியாக வந்தனர். பின்னர் அவர் மீண்டும் அவர் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.   


Tags : DMK ,Ambattur , The DMK candidate from Ambattur constituency affected by the corona infection voted in full armor
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு