×

வாக்களிப்பதில் ஆர்வம்; ஆட்சி மாற்றத்திற்கான விருப்பம்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி:  தமிழக சட்ட பேரவை தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்ததை பார்க்கும்போது ஆட்சி மாற்றத்திற்கான விருப்பமாக உள்ளதை காட்டுகிறது என்று முத்தரசன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் உதவிபெறும் துவக்கப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குடும்பத்துடன் நேற்று காலை வாக்குப்பதிவு செய்தார். அப்போது முத்தரசன் அளித்த பேட்டி: தமிழக சட்ட பேரவை தேர்தலில் அதிகாலை முதல் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கியூவரிசையில் காத்திருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் அனைவரும் வாக்களித்து வந்தனர். இவ்வாறு மக்கள் வாக்களிக்க வந்து இருப்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. மக்களுடைய விருப்பமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. வாக்காளர்களின் வருகை என்பது அதை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Trialsen , In voting, interest, for regime change, Mutharasan
× RELATED மழை பெய்யும் போது எந்த உதவியும் செய்ய...