×

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: கலிங்கப்பட்டியில் வைகோ பேட்டி

திருவேங்கடம்: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம்,  சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை மகன் துரை வையாபுரியுடன் வாக்களித்தார். பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்களித்துள்ளனர்.

அவர்களது உற்சாகத்தை காணும் போது  200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. இதே போல் சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் ராஜாவும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது’’ என்றார்.

Tags : DMK ,Vaiko ,Kalingapatty , Over 200, block, DMK alliance, win, Vaiko
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி