×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,645 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு: 25,598 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,07,124 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,07,124 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,809 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,68,722 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,804 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 9 ; தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1303 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,56,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,00,93,091 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,856 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 25,598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,47,561 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,176 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,59,527 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,469 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 260 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 191$.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மேற்கு வங்கம்- 19
* மத்தியபிரதேசம்- 2
* ஆந்திரப்பிரதேசம்- 5
* உத்திரபிரதேசம்- 1
* பீகார்- 5

Tags : Corona ,Tamil Nadu , Corona to 3,645 people in Tamil Nadu in last 24 hours; 15 deaths: 25,598 continue treatment: Health Department report ..!
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...