திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் தனது வாக்கை வேறொருவர் செலுத்தியதால் ரமேஷ் என்பவர் 49P படிவம் மூலம் வாக்களித்தார். திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190வரிசை எண் 990), மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கனவே பதிவானது கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார் என்பவர் தனது ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தியுள்ளார்.