×

கோவில்பட்டி தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவேன் : டிடிவி தினகரன் நம்பிக்கை!!

சென்னை: தமிழக மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று சென்னையில் வாக்களித்த டி.டி.வி தினகரன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடும் டி.டி.வி. தினகரன் , சென்னை அடையாறு தாமோதபுரம் வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் டி.டி.வி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழக மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கோவில்பட்டி தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.துரோக சக்திகள் ஆட்சிக்கு வர, மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.அமமுக. வேட்பாளர்கள் ரூ10 கோடி,ரூ20 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டது உண்மைதான்.கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர்., என்றார்.


Tags : Covilbati ,DTV Dinagaran , டிடிவி தினகரன்
× RELATED அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்...