×

அள்ளூர் கிராமத்தில் புதிய தார்சாலை அமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராமத்தில் குடியி–்ருப்புவாசிகள் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.பூதங்குடி ஊராட்சிக்குட்பட்ட அள்ளூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பாழ்வாய்க்கால் புதிய பாலத்தினருகே உள்ள புதுநகர் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை ஜல்லிகள் கொட்டப்பட்டு செம்மண்ணை சமன் செய்து 6 ஆண்டுக்கு முன் சாலை அமைக்க பட்டதோடு விட்டு விட்டனர்.

இதனால் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கின்றது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகம் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கன மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் தேங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகின்றது. இது குறித்து பல முறை கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு ஆய்வு செய்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Darsala ,Allur , Sethiyatthoppu: Residents demand construction of a new Darsala in Allur village near Sethiyatthoppu
× RELATED ரோடு ரோலர் வாகனம் கடைகள், பைக்குகள் மீது மோதி விபத்து