×

நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதியளிக்க கோரி ஆளுநருக்கு திமுக கடிதம்

சென்னை: நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதியளிக்க கோரி ஆளுநருக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதும் நடவடிக்கை கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு அரசு நிலத்தை குறைந்த விலைக்கு கொடுத்ததால் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் சந்தை விலை ஒரு சதுர அடி ரூ.25,000-ராஜா உள்ள நிலையில் தனியார் நிறுவனத்துக்கு ரூ.12,000-க்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்குவதற்கு வெளிப்படையாக ஏலம் கோராமல் ரகசியமாக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : DMK ,Governor ,Chief Minister ,Palanisamy , DMK writes to Governor seeking permission to prosecute Chief Minister Palanisamy in connection with land allotment scam
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!