×

சுற்றுலாவுக்கு வந்தபோது ஏலகிரி மலையில் கார் கவிழ்ந்து விபத்து-6 வாலிபர்கள் படுகாயம்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலை சாலையில் சுற்றுலா பயணிகள் வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏலகிரிக்கு சென்னையை சேர்ந்த தனுஷ்குமார்(28), மதன்(27), இம்ரான்(27), உதயகுமார்(27), இமானுவேல்(27), வேலூரை சேர்ந்த பாலாஜி(17) ஆகியோர் காரில் வந்தனர். தொடர்ந்து, நேற்று நண்பர்கள் 6 பேரும் ஏலகிரியை சுற்றி பார்த்தனர். இதையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, மலையின் 2வது வளைவு சாலையை முடித்து முதல் வளைவு சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 வாலிபர்களும் படுகாயமடைந்தனர்.
 
இதனை கண்ட அவ்வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏலகிரி மலை போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மலை சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mount Aegiri , Jolarpettai: Six people from Chennai were injured when a tourist car overturned on the Yelagiri hill road.
× RELATED சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை...