×

நத்தம் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் தான் உதிக்கும்-திமுக வேட்பாளர் பேச்சு

கோபால்பட்டி : நத்தம் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் தான் உதிக்கும் என நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் உறுதிபட கூறினார்.தமிழகம் முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் நந்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் கோபால்பட்டியில் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. அதிமுக கூட்டணி மதவாத கூட்டணி. நத்தத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், நத்தம் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை.

தற்போது அரசு கலைக்கல்லூரி, குடிநீர் பிரச்னை ஆகியவற்றை தீர்ப்பேன் என்று இப்போது பிரசாரம் செய்கிறார். கடந்த தேர்தலில் ஆத்தூரில் போட்டியிட்டு தோல்வி கண்ட விஸ்வநாதன், நத்தம் தொகுதியை மறந்து விட்டார். ஆனால், தற்போது நத்தம் தொகுதிக்கு அடிப்படை வசதி செய்து தருவேன் என்று பொதுமக்களை ஏமாற்றுகிறார். ஆனால், நத்தம் தொகுதி மக்கள் இவரிடம் ஏமாற மாட்டார்கள். நத்தம் தொகுதியில் உதயசூரியன் உதிப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், மோகன். தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Udayasooriyan ,Natham constituency , Gopalpatti: Natham constituency DMK candidate Andy Ambalam to ensure that Udayasuriya will roll again in Natham constituency
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக...