×

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் 108 பால்குட அபிஷேகம்

பெரம்பூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அமோக வெற்றி பெறவும், தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறவும் வேண்டி காங்கிரஸ் கட்சி பிரதிநிதி சண்முகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பஜனை கோயில் பகுதியிலிருந்து பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று தீட்டி தோட்டம் பகுதியில் உள்ள ஜெயசக்தி விநாயகர் கோயிலில் பாலபிஷேகம் செய்தனர். திமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.  வடசென்னை காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் ஷிப்பிங் டில்லிபாபு, மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் சேம நாராயணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : 108 ,Balkuda ,Congress Party ,Chief Minister ,MK Stalin , 108 Balkuda anointed on behalf of the Congress Party to become the Chief Minister of MK Stalin
× RELATED 11ம் தேதிவரை வெப்பம் அதிகரிக்கும்...