×

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஆர்.ராஜா இறுதிகட்ட பிரசாரம்

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா நேற்று மாலை தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தாம்பரம் தொகுதியில் 2 முறை நகர மன்ற உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நான் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதில் குறிப்பாக, வட்டாட்சியர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், தேசிய சித்த மருத்துவமனை, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், மேற்கு தாம்பரம் மின் நிலையம், தாம்பரம் மேம்பாலம், நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தாம்பரத்தில் முழு நேர கிளை நூலகம், தாம்பரத்தில் மீன் அங்காடி, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அனைத்தும் நான் பொறுப்பில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. இதுபோல பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தாம்பரம் தொகுதியில் மீண்டும் செய்திட பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்வதுடன், தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உதவி செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின்போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : SR Raja ,Tambaram Assembly , SR Raja's final campaign in Tambaram Assembly constituency
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...