×

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர்  அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ராயபுரம் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளேன். அதற்கு தொகுதி மக்கள் நீங்கள் தான் காரணம். இந்த முறையும் நான் போட்டியிடுகிறேன். எனக்கு ஆதரவு தந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். தொகுதி மக்களின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன். மூலக்கொத்தளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய நவீன குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

போஜராஜன் நகரில் ரயில்வே சுரங்கப்பால பணிகள் முடியும் நிலையில் உள்ளது. காசிமேடு மீன் விற்பனை கூடம் புதிதாக கட்டி கொடுத்துள்ளேன். போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாலம், மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளேன். கொரோனா  காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி 2 முறை சொந்த செலவில் வழங்கியுள்ளேன். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளேன். ராயபுரம் தொகுதியை மேம்படுத்த பூங்காக்கள், சமூக நலக்கூடம், உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைத்துள்ளேன். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்,’ என்றார்.

Tags : Minister ,Jayakumar ,Rayapuram , Minister Jayakumar campaigning in Rayapuram assembly constituency
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...