×

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் டி.கே.எம்.சின்னையா பிரசாரம்

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா தொகுதி நேற்று தொகுதி முழுவதும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனை, அமைச்சராக இருந்து செயல்படுத்திய பல்வேறு திட்டம், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு கேட்டார். அப்போது மக்கள் மத்தியில் டி.கே.எம்.சின்னையா பேசுகையில், ‘எல்லா அரிசி அட்டை குடும்பதாரருக்கும் ஆண்டிற்கு விலையில்லாமல் 6 காஸ் சிலிண்டர் வழங்கப்படும். இல்லத்தரசிகளின் குறைகளை போக்க எல்லா அரிசி குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லாமல் வாஷிங் மிஷின் வழங்கப்படும்.

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். மாதந்தோறும் எல்லா அரிசி குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1,500 வழங்கப்படும் உள்ளிட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொகுதி மக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்,’ என்றார். பிரசாரத்தின் போது அதிமுக நகர செயலாளர் கூத்தன், நகரமன்ற முன்னாள் துணை தலைவர் கோபிநாதன், ஒன்றிய கழக செயலாளர் என்.பி.கிருஷ்ணன், பாஜக செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் வேதசுப்பிரமணியம், பாமக விநாயகம், தமாகா லயன் மணி, புரட்சி பாரதம் சேகர் உள்பட கூட்டணி கட்சியினர் அவருக்காக பிரசாரம் செய்தனர்.

Tags : TKM Chinnaiya ,Tambaram assembly , TKM Chinnaiya campaign in Tambaram assembly constituency
× RELATED தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.33.6...