×

எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில், எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் உள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, பாரத் இந்து முன்னணி நிர்வாகிகளையும், இந்திய சமுதாய தலைவர்களையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாஷிங் மிஷன், மாதம்தோறும் ரூ.1,500, வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். மேலும், இந்த தொகுதிகளில் குடிநீர் பிரச்சனை, அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். பட்டா கோரிக்கை நிறைவேற்றப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையும் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். இந்த தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவதே லட்சியம் என்று வாக்குறுதி அளித்தார். நேற்று பிரசாரம் செய்ய இறுதி நாள் என்பதால் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags : Egmore , Janpandian polling in Egmore constituency
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!