×

விழிப்புடன் இருக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை:அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து வெளியிட்ட அறிக்கை: நம் முகவர்கள் வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவு நாளன்று வாக்காளர்கள் அனைவரும் காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும் என கூறியுள்ளனர்.



Tags : Be vigilant: OBS, EPS request
× RELATED சொல்லிட்டாங்க…