×

ஓபிஎஸ் தேர்தல் பிரசாரத்தின்போது தேம்பித் தேம்பி அழுதார் ஆண்டிபட்டி வேட்பாளர்: உச் கொட்டிய மக்கள்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக நகரில் உள்ள பாலக்கோம்பை பிரிவில், அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கூட்டத்தை கூட்டினர். அங்கு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘லோகிராஜன் பாவம்யா, அப்புராணி, அவருக்கு இந்த முறையாவது ஓட்டை போட்டு ஜெயிக்க வையுங்கய்யா...’’ என்றார். அவருக்கருகில் பொதுமக்களை பார்த்து கும்பிட்டபடி நின்றிருந்த லோகிராஜன் திடீரென உணர்ச்சி வசப்பட்டு தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்தார். ஓபிஎஸ் அவரை தேற்றி சமாதானம் செய்து, பிரசாரத்தை முடித்தார்.



Tags : Andipatti ,OPS , During the OPS election campaign Antipatti Candidate: Uch Kottiya People
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...