திருவண்ணாமலை: பாஜகவுடன் அதிமுக கூட்டு சேர்ந்ததை பலரும் விரும்பவில்லை என ராதிகா சரத்குமார் கூறினார். ராதிகா சரத்குமார் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த ராதிகா சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: சமத்துவ மக்கள் கட்சி-மநீம கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அதிமுக தலைமை இல்லாத ஒரு கட்சி.
ஜெயலலிதாவின் செயல்பாட்டை மறந்துவிட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இது யாருக்குமே பிடிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக மீது பெரிய அளவிற்கு பற்றோ பிடிப்போ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.