ஜகர்டா: இந்தோனேஷியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபுளோரஸ் தீவில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கெடுத்து நிலச்சரிவில் 50 வீடுகள் சேற்றில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கிய 41 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டதாக இந்தோனேஷிய அரசு அறிவித்துள்ளது.