×

புதுப்பேட்டை, எழும்பூர் பகுதிகளில் ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் நேற்று காலை புதுப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் கல்லூரி, மிர்மதன் அலி தெரு, கொய்யாத்தோப்பு, வீரபத்திரன் தெரு, பாஷா தெரு, ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, ஆதித்தனார் சாலை,  நரியங்காடு போலீஸ் குடியிருப்பு, பாந்தியன் சாலை, காசா மேஜர் சாலை, காந்தி இர்வின் சாலை, தாசபிரகாஷ் உள்ளிட்ட பகுதிகளில் தெரு தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாஷிங் மிஷன், மாதம்தோறும் ரூ.1,500, வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர் உள்ளிட்டவற்றை மக்களுக்கு பெற்று தருவேன் எனக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். மேலும் இந்த தொகுதிகளில் குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். இந்த தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவதே லட்சியம். மேலும் இப்பகுதியில் மக்கள் நீண்ட நாட்களாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளவும், மக்கள் நல பணிகளை மேற்கொள்ளவும், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.

Tags : Puthuppettai ,Egmore , Janpandian polling in Puthuppettai and Egmore areas
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...