×

விருகம்பாக்கத்தில் அரசு கலைக்கல்லூரி: பிரபாகர் ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா நேற்று காலை கலைஞர் நகர் தெற்கு பகுதி 131 ‘அ’ வட்டத்துக்கு உட்பட்ட டபுள் டேங் காலனி, சிபிஐ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று, திமுக தேர்தல் அறிக்கையை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த மக்கள் கொரோனா ஊரடங்கு நேரத்தில் உணவுக்காக பரிதவித்தபோது உயிரையும் துச்சமென நினைத்து எங்களை நேரில் சந்தித்து உணவு பொருட்களை வழங்கினீர்கள். சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் வழங்கினீர்கள். மழை வெள்ள காலங்களில் எங்களோடு இருந்து எங்களுக்கு தேவையானதை செய்துள்ளீர்கள்.

இதை நாங்கள் யாரும் மறக்கவில்லை. மக்கள் பிரதிநிதியாக இல்லாதபோதே நாங்கள் கேட்காமல் இவ்வளவு உதவி செய்தீர்கள். எனவே, எம்எல்ஏவாக நீங்கள் தான் வர வேண்டும். இதனால் எங்கள் வாக்கு உங்களுக்கு தான், என்று வாக்குறுதி அளித்தனர். அப்போது என்றென்றும் உங்களுடன் இருந்து நான் பணியாற்றுவேன். மேலும் விருகம்பாக்கம் தொகுதியில் மாணவர்கள் நலன் கருதி அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்,’ என்றார். பிரசாரத்தின் போது பகுதி செயலாளர் கே.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, வட்ட செயலாளர் இரா.செழியன், கார்த்திக், ஆனந்த், கண்ணா மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : Government Arts College ,Virukambakkam ,Prabhakar , Government Arts College at Virukambakkam: Prabhakar Raja Promise
× RELATED கல்லூரி வளாகத்தில் இருந்த தேனீக்கள் தீவைத்து அழிப்பு