கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் எஸ்.புதூர் என்ற கிராமத்தில் வாழைத் தோப்பில் ரூபாய் 11.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமாக இருந்தவர்களை கண்டு தோப்புக்குள் சென்ற போது மர்மநபர்கள் தப்பியோடினர். பணத்தினை வாழைத் தோப்பில் போட்டுவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.