×

உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட சீமான்

சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருச்சினாங்குப்பம் பகுதியில் திறந்த ஜீப்பில் நேற்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திமுக தேர்தல் அலுவலகம் அருகே வரும்பொழுது அங்கிருந்த திமுக வேட்பாளர் கே.பி.சங்கரின் புகைப்படம் சின்னங்கள் பிரமாண்டமாக அமைக்க பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே ஒலிபெருக்கியில் பேசியபடி  வந்த சீமான் திடீரென்று, ”உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார்.

அப்போது அங்கு கூடி இருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் திகைத்து போய் நின்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட சீமான், தனது சின்னமான விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று மாற்றி பேசினார். சீமான் இவ்வாறு எதிர்பாராதவிதமாக திடீரென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டது அங்கிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளுக்குள் அவர் இன்னும் பழைய திமுககாரர் என்பதை அன்னன் நொடிக்கொருதரம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் சீமானின் தம்பிகள்.

Tags : Udayassun , Seeman who asked to drive to Udayasooriyan
× RELATED சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால்...