×

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு அறைக்கு மாற்றம்: ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல்

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ்  மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துமவனைக்கு கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அவருக்கு செவ்வாய்க்கிழமை இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  மார்ச் 30 ஆம் தேதி ஜனாதிபதிக்கு  பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Tags : President ,Ramnath ,Govind Aims Hospital ,Presidential Palace , President, Ramnath Govind, Health
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...