×

திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி பழகி பெண் இன்ஜினியரிடம் 33.75 லட்சம் அபேஸ்: பெங்களூரு வாலிபருக்கு வலை

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக பெண் இன்ஜினியரிடம் நெருங்கி பழகி 33.75 லட்சம் பெற்று மோசடி செய்த பெங்களூரு பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (23), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, பெற்றோர் இணையதளம் மூலம் வரன் பார்த்துள்ளனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பொறியாளரை இந்துவுக்கும் பிடித்திருந்தது. இதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பொறியாளருடன் இந்து தினமும் செல்போனில் பேசி வந்துள்ளார். பிறகு இருவரும் நேரில் சந்தித்து தனியாக நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, பொறியாளர் அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி 35 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு இந்துவின் குடும்பத்தார், வருங்கால மருமகன் தானே என்று நினைத்து ₹33.75 லட்சத்தை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்ற ெபாறியாளர் தினமும் இந்துவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இந்து போன் செய்தாலும் பல்வேறு காரணங்களை கூறி பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை கேட்ட இந்துவுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இந்து புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூருவில் உள்ள பொறியாளரை தேடி வருகின்றனர்.



Tags : Bangalore , Get used to getting close to getting married 33.75 lakh jobs for female engineers: Web for Bangalore teenagers
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...