×

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை:  ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், தொகுதிக்குட்பட்ட என்.எஸ்.கோயில் தெருவில் தொடங்கி வெங்கடாசலம் தெரு, ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு, ஜி.எம்.பேட்டை, துலுக்காணத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
  அப்போது, மக்கள் மத்தியில் ஜெயக்குமார் பேசியதாவது:கடந்த 1991ம் ஆண்டு ராயபுரம் தொகுதி வேட்பாளராக ஜெயலலிதா என்னை நிற்க வைத்து வெற்றி பெற செய்ய செய்தார். அதிலிருந்து தொடர்ந்து அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக பணியாற்றி வருகிறேன். தொகுதி மக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கிறேன்.

 அதிமுக அரசு பொதுமக்களுக்கு கொரோனா காலத்தில் ரூ.1000 நிவாரணம் வழங்கியது. அதேபோல், பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கியது. இதுபோல் பல்வேறு திட்டங்களை தற்போது தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளது. இதை தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். ராயபுரம் பகுதி வியாபாரம் நிறைந்த பகுதி. எனவே, வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளோம். தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, ராயபுரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் வெற்றி பெற செய்ய  வேண்டும்,’ என்றார்.



Tags : Minister ,Jayakumar ,Rayapuram , In Rayapuram Assembly constituency Minister Jayakumar campaign
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...